Sunday, January 3, 2010

55 வார்த்தை கதை - Modified Tamil version of 55 Fiction


அய்யோ! வாங்க. இந்த அம்மா கையில மாட்டிக்கிட்டு என்னால தாங்க முடியலைங்க. திடீர்னு அது மண்டைல ஏதாவது கிறுக்குத்தனமா உதிச்சா என் உயிர எதுக்கு வாங்குதுன்னு எனக்கு புரியல. அது தலைல உதிச்சதுக்கு என் தலைய புடிச்சு உருட்டு உருட்டுனு உருட்டுது. எதுவும் உதிக்கலைனா என் வால கடிக்குது; இல்ல என்னயே உலுக்கு உலுக்குனு உலுக்கி எடுக்குது. என் உடம்புல இருக்கிற கடைசி சொட்டு நீல ரத்தம் காலியானா தான் எனக்கு விடுதலை. புலம்புகிறது எனது பேனா.

1 comment: