Showing posts with label தமிழ். Show all posts
Showing posts with label தமிழ். Show all posts

Sunday, July 18, 2010

காதல் போயின்... ... II

 முன்குறிப்பு: பகுதி II தாமதித்து இடப்பட்டுள்ளதால் பகுதி I-ன் கதாபாதிரங்களின் பெயர்களை ரீகால் செய்து கொள்ளவும், குழப்பங்களை தவிர்க்க. நன்றி!



26 ஏப்ரல் 2009. காலை 8:15.

           சென்னை. அடையார் அடுக்கு மாடிக் குடியிருப்பின் ஒரு வீடு. "வதனா!.. வதனா!!.. என்னோட ப்ளூ டைய்ய எங்க வெச்ச? நான் தான் டை எல்லாம் மேல இருக்குற ரேக்ல வைனு சொல்லிருக்கேன்ல?" அலுவலகத்திற்கு புறப்படும் அவசரத்தில் அரவிந்த். வதனா வந்து அலமாரியின் மேலறையைத் திறந்து டையை எடுத்து அவன் கையில் கொடுத்து விட்டு , "நீ எங்க வைக்க சொன்னியோ அங்கையே  தான் வெச்சிருக்கேன். உன்னோட ரெண்டு நொள்ளக்கண்ணையும் நல்லா தொறந்து பாரு." எனக் கூற, அரவிந்த் அசட்டு சிரிப்பு சிரித்துக் கொண்டே, "எனக்கு தெரியும்டி. உனக்குத் தெரியுதானு டெஸ்ட் பண்ணேன்!", என்றான். "ஹி.. ஹி.. ஹி.. ஸோ ஃபன்னி. தொடச்சுட்டு ஆஃபீஸ் கெளம்புற வழிய பாரு. டைம் ஆச்சு." என அவள் பல்ப் கொடுக்க என, ஒரு வழியாக இருவரும் கிளம்பிச் சென்றார்கள். வதனாவின் அலுவலகத்தில் அவளை இறக்கி விட்டு கிளம்ப யத்தனித்த அரவிந்த் மீண்டும் நின்று திரும்பி, "வதனா! இன்னைக்கு சாயந்திரம் ஆஃபீஸ்லேர்ந்து அப்டியே சிட்டி மால்‍‍-க்கு போய்ட்டு வந்திடுவோம். சரியா 5.30 க்கு வந்திடுறேன் என்ன?"  எனக் கூறி விட்டு கிளம்ப, வதனா அந்த இடத்தை விட்டு அகலாமல் 2 நிமிடம் நின்று விட்டு பின்பு விறுவிறுவென அலுவலகத்திற்குள் நடக்கத் தொடங்கினாள்.

26 ஏப்ரல் 2009. மாலை 6:00. 

          இருவரும் மால்-ன் இரண்டாவது தளத்தில் நடந்துக் கொண்டிருக்கையில், முதுகில் சுளீரென்ற அடியுடன், "வதனா.....!!" என்ற குரல் வர, வலியுடன் பின்னால் திரும்பி பார்த்தால், கல்லூரி படிப்பு முடிந்தவுடன் யு.எஸ். கிளம்பிப் போன ப்ரீத்தி நின்றுகொண்டிருந்தாள். "ஹேய் ப்ரீத்தி!!!" வதனாவும் கத்த, தோழிகள் இருவரும் அணைத்துக் கொண்டு,  "என்னடி! நீ தானா இது?"  "இப்டி குண்டாயிட்ட!"  "முடி வெட்டிட்டியா?" என மாறி மாறி கேட்டுக் கொண்டிருக்கும்போது தான் அருகில் நிற்கும் அரவிந்தை கவனித்தாள் ப்ரீத்தி. சட்டென பேச்சை நிறுத்தி அவன் பக்கம் திரும்ப, "ப்ரீத்தி! இவர் தான் அரவிந்த. என் ஹஸ்பெண்ட்." எனக் கூறி முடிக்கவில்லை வதனா, இருவரையும் மாறி மாறி பார்த்த ப்ரீத்தி, "வதனா! எனக்கு அவசரமா ஒரு வேல இருக்குடி. நான் உன்ன மெயில்ல கான்டாக்ட் பண்றேன்." எனக் கூறித் திரும்பிப் பாராமல் நடக்கத் துவங்கினாள். ஒரு வெற்றுப் புன்னகையை அவள் முதுகிற்கு உதிர்த்து விட்டு அரவிந்துடன் நடக்கத் தொடங்கினாள் வதனா.

          கீழே முதல் தளத்தில் அவளுக்காகக் காத்துக் கொண்டிருந்த ப்ரீத்தியின் கணவன் அருண் அவளைக் கண்டதும், "என்னக் கொடும சரவணன் இது! பழைய ஃப்ரெண்ட பார்த்துட்டேன்னு அந்த ஓட்டம் ஓடின? கீழ வர எப்டியும் ஒரு மணி நேரம் ஆகும். ஜாலியா சுத்தலாம்னு நெனச்சா அதுக்குள்ள வந்து நிக்கிற? என்ன ஆச்சு உன் ஃப்ரெண்டுக்கு?" எனக் கேட்டான். ப்ரீத்தி அவனை முறைத்துப் பார்த்து, " அவளப் பத்திப் பேசாதீங்க அருண்! அவளுக்கு மனசுன்னு ஒண்ணு இருக்கான்னே எனக்கு சந்தேகமா இருக்கு! பொண்ணே இல்லங்க அவ!" எனப் பொறுமித் தள்ளத் தொடங்க, "ஹேய்! கூல்.. கூல்.. வா, இப்டி உக்காரு. என்ன ஆச்சு? சொல்லு." என அருகில் இருந்த நாற்காலியில் அவளை அமர்த்தி தானும் ஒன்றில் அமர்ந்தான். தன்னை ஆசுவாசபடுத்திக் கொண்ட ப்ரீத்தி, வதனா-ரகுவின் காதல் கதையையும், ரம்யாவின் திருமணத்திற்கு கிளம்பிப் போன ரகு அதற்குப் பின் காணாமல் போனதும், இப்போது வதனா வேறொருவரை மணம் முடித்திருப்பதையும் மூச்சு விடாமல் சொல்லி நிறுத்தினாள். "என்னப் பொண்ணு அருண் இவ? 5 வருஷம் ஒருத்தன காதலிச்சிட்டு இன்னொருத்தன கல்யாணம் பண்ணிக்க எப்டி இவளுக்கு மனசு வந்துது?" இவ்வளவையும் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த அருண், அவள் தோள் மேல் மெதுவாக கை வைத்து, "இதுல தப்பு என்ன இருக்கு ப்ரீத்தி? அவ ஒண்ணும் அவன ஏமாத்திட்டு வேற ஒருத்தன கல்யாணம் பண்ணிக்கலையே? ஏதோ அவன் காணாம போயிட்டான். அதுக்காக? அவன நெனச்சுட்டே இருக்க சொல்றியா? அவளுக்குன்னு ஒரு குடும்பம், வாழ்க்கை... சரி, அவ்ளோ எதுக்கு? நீ, நான் எல்லாம் வாழ்ற மாதிரி அவ வாழ்ற வாழ்க்கைக்கும்  ஒரு அர்த்தம் வேண்டாமா?" என்றவனை இடைமறித்து, "அதுக்காக ரகு இருந்த இடத்துல இன்னொருத்தன எப்டிங்க‌ அவளால வெச்சுப் பாக்க முடியும்? என்றாள் ப்ரீத்தி. அருண் சிரித்துக் கொண்டே, "ரகுவ வெச்சிருந்த இடத்துல இவன வெச்சிட்டானு இல்லடா. அரவிந்த கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் ரகுவ அவ காதலிச்சது காதலிச்சது தான். அது பொய் ஆகிடாது. ஆனா அது உண்மைங்கிறதுக்காக அந்த உண்மைய கட்டிகிட்டு வாழ்க்கைய ஓட்ட முடியாது. லைஃப் ஹாஸ் டு மூவ் ஆன் இல்லையா?" என அருண் விளக்க, அதை சரி என்றோ தவறு என்றோ பிரித்துக் கூற முடியாமல் குழப்பத்துடனேயே கிளம்பினாள் ப்ரீத்தி.

26 ‍ ஏப்ரல் ‍ 2009. மாலை 6:00. 

          அவர்களுக்கு நன்றி கூறி விடைபெற்று நேரே சென்னை வந்தான் ரகு. வதனாவின் வீட்டின் முன் போய் நின்றான். வதனா இருக்கும் இடத்தை தெரிந்து கொண்டு அவளை தூர இருந்தாவது ஒரு முறை பார்த்து விடும் ஆவலில் நின்ற அவனின் பின்புறமிருந்து ஆச்சரிய தொனியில் ஒரு குரல். "ரகு!!!!!!!", பின்னால் வதனா. அவன் கண்களை அவ்னால் நம்ப முடியவில்லை. அதே நிலை வதனாவிற்கும். ரகுவின் மனதில் பல கேள்விகள். 'தனியாக வந்திருக்கிறாளே?' 'அரவிந்த் எங்கே?' 'என்ன இது?' 'கழுத்தில் மஞ்சள் கயிறு எதுவும் தெரியவில்லையே?' தயக்கத்துடன், ""வதனா! உனக்கு கல்யாணம்...?", அரவிந்த். கண்களில் நீர் ததும்ப நின்ற வதனா, "கல்யாணமா?" என்றாள். 'அப்படியென்றால் வதனாவிற்கு திருமணம் ஆகவில்லையா?' 'எல்லாம் என் கற்பனையா?' என எண்ணி மகிழ்ந்த ரகு, "ஏன் வதனா? என்ன வெச்ச இடத்துல வேற யாரையும் வைச்சு பார்க்க முடியலயா உன்னால? நம்ம காதல நெனச்சுட்டே இருந்துடலாம்னு நெனச்சியா?" என அடுக்கிக் கொண்டே போக, வதனா, "ரகு, இப்டியெல்லாம் என்ன கேட்டா எனக்கு பதில் சொல்ல தெரியல ரகு. நீ இருந்த இடம். வேற ஒருத்தர வைக்கிறதுன்னுல்லாம் நான் எதுவும் யோசிக்கல. காதல நினைச்சுட்டே இருக்கணும்னெல்லாம் எந்த முடிவும் எடுக்கல. இனிமேல் என் வாழ்க்கைல என்ன நடந்திருக்கும்னும் எனக்கு தெரியாது. ஆனால் உன்னை காதலிச்சேன். காதலிக்கிறேன். காதலிச்சிட்டு இருப்பேன். இது மட்டும் உண்மைங்கிறது எனக்கு தெரியும்!

26 ஏப்ரல் 2009. காலை 8:15.

          தலையில் சம்மட்டியால் ஓங்கி அடித்தாற் போன்ற வலியுடன் கண் விழித்தான் ரகு. "அப்பா! அப்பா! இந்த மாமா கண்ண முழிக்கிறாரு பாருங்க. சீக்கிரம் வாங்கப்பா!" என ஒரு பிஞ்சுக் குரல். கண் திறந்து, "நான் எங்க இருக்கேன்?" என்றான் ரகு. வழக்கமாக இந்த கேள்வி கேட்கப்படும் இடம் மருத்துவமனையாகவும், வெள்ளை சுற்றத்தோடு, சுற்றிலும் மருத்துவர்களும் இருப்பர். ஆனால் ரகுவின் கண்களுக்குத் தெரிந்ததென்னவோ தலைக்கு மேல் ஓடுகளும், தன்னைச் சுற்றிக் கைலியுடன் நிற்கும் ஐந்தாறு பேரும் தான். அவனுக்கு ஞாபகம் இருந்த வரையில் ரம்யாவின் திருமணத்தின் முன்தினம் தாலியை குலதெய்வ கோயிலில் வைத்து எடுத்து வருவதற்காக டாடா சுமோவில் ஒரு படை கிளம்ப, தான் மட்டும் ஒரு நண்பனைச் சந்தித்து விட்டு வருவதாக சொல்லி, நண்பனின் யமஹாவை வாங்கி பறந்தான். பெரம்பலூர் அருகில் இருந்த கிராமத்தை நெருங்கி கொண்டிருக்கையில், ஒரு அம்பாசடர் காரின் மேது போய் மோதியது மட்டுமே ஞாபகம் இருந்தது. தான் இப்பொழுது இருப்பது வெளியுலகத்தில் இருந்து ஒதுங்கியே இருக்கும்  ஒரு கிராமம் என்பதும், சித்த வைத்திய நிபுணர்கள் பலர் இருக்கும் அந்த கிராமத்தில் அவ்வப்போது மருந்து வாங்க வெளியுலக ஆட்கள் பிரவேசிப்பார்கள் என்பதும், அக்கிராமத் தலைவரின் சகோதரர், அன்று ஒருவருக்கு சிகிச்சை செய்ய அவசரமாகச் செல்லும் வழியில் தான் அவர் வண்டியில் தான் அடிபட்டதும், உடன் அவர் அவனை இங்கு கொண்டு வந்து இதுநாள் வரை கவனிக்கப்பட்டதையும் அறிந்து கொண்டான். தன்னைச் சுற்றி நடப்பதை எதையும் நம்ப இயலாதவனாய் அங்கிருந்து கிளம்பினான் ரகு நேரே வதனாவின் வீட்டிற்கு அவள் அரவிந்துடன் மகிழ்வுடன் இருப்பதை தூர இருந்தாவது பார்த்து விடும் ஆவலில்.

Monday, April 12, 2010

காதல் போயின்... ...


        அட வீணாப் போன வெந்தயமே! நான் தான் சொன்னேனேடா வரலைனு. நீ பாட்டுக்கு அங போய் நின்னுட்டு ஏன் வரலனு கேட்டா என்ன பதில் சொல்ல சொல்ற என்ன?", வெடித்தாள் வதனா. "எது! வரலனு சொன்னியா? எப்படீ சொன்ன?", ரகுநாத். "ஏண்டா, மீட்டிங்ல இருக்கேன், அப்புறம் கால் பண்றேன்னு மெசேஜ் அனுப்பினதுக்கு, ஈவினிங் சிட்டி மாலுக்கு வர்றியா இல்லையானு மட்டும் சொல்லுனு நீ தானே கேட்ட. அதுக்கு நான் தான் இல்ல. வரலனு ரிப்ளை பண்ணேன்ல? இப்ப அங்க போய் நின்னுட்டு எப்ப வரனு...." என வதனா எகஸ்ப்ளணேஷன் கொடுத்துக் கொண்டிருக்கும்போதே இடையில் புகுந்தான் ரகு. "என்னது? வரலனு மெஸேஜ் அனுப்பினியா? எனக்கு வரலையே!" "வரலையா? உன் மெஸேஜ் பார்த்த உடனே ரிப்ளை பண்ணிட்டேனேடா!" சற்று கவலையுடன் வதனா. இதைக் கேட்டு டென்ஷனான ரகு, "அதெப்படி? மீட்டிங்ல இருக்கேன்னு அனுப்பினது மட்டும் வந்துது, இது எப்படி வராம இருக்கும்? நீ அனுப்பலேன்னு சொல்லு." எனக் கத்தினான். வதனாவும் லைட்டாக டென்ஷனாகி, "மெஸேஜ் வரலனு என்னக் கேட்டா? போய் ஏர்டெல்காரன கேளு" ஒரு 10 வினாடிகளுக்குப் பின்னர் ரகு, " இப்ப என்ன வர்றியா இல்லையா?"  " இங்கிருந்து கிளம்பி வரவே 2 மணி நேரம் ஆயிடும் ரகு. அப்புறம் வீட்டுக்கு நடுராத்திரிக்குப் போக சொல்றியா?", வதனா. " சரி, வர வேணாம், வை!" என ரகு அழைப்பைத் துண்டிக்க, வதனாவுக்கும் கோபம். அவளும் திரும்ப அழைக்கவில்லை.

        அடடா! செம சீரியஸான சண்டைய பாத்துட்டு இருந்ததுல நம்ம ஹீரோ, ஹீரோயினோட இன்ட்ரொடக்ஷனையே குடுக்கல போங்க. சரி, அவங்க சமாதானமாகிறதுக்குள்ள அத ஒரு தடவ பாத்திடுவோம் வாங்க. ஒரு 6 டோர்டோய்ஸ் சுருள் எடுத்து முகத்துக்கு முன்னாடி வெச்சுக்கோங்க. ஆமாங்க! நம்ம கத 6 வருஷத்துக்கு முன்னாடி ஆரம்பிக்குது. ரகுவுக்கு சொந்த ஊரு நம்ம மதுரப்பக்கம். வதனாவுக்கு சிங்காரச் சென்னை. ரகு அஜித், சூர்யா கணக்காவும், வதனா அசின், நயந்தார மாதிரியெல்லாம் இருக்க மாட்டாங்க. ரகு மாதிரி ரகு இருப்பான். வதனா மாதிரி வதனா இருப்பாள். இவங்க தானே ஹீரோ ஹீரோயின். ரெண்டு பேரும் சந்திக்கிறதுக்கு பொதுவா ஒரு இடம் இருக்கணுமே! அங்க தான் திருச்சி மலைக்கோட்டைய டாப் ஆங்கிள்ள இருந்து ஜூம் பண்ணி காட்டுறோம். ரெண்டு பேரும் பி.ஈ படிக்க வந்த இடம் தி ராக் சிட்டி,  திருச்சி. ரெண்டு பேரும் முதன்முதல்ல சந்திச்சிக்கிட்ட உடனே, கண்களாலயே பேசி, பேக் க்ரௌண்ட்ல நம்தன நம்தன நம்தன நம்தம்னு ம்யூசிக் ஓடி, 4 வருஷமும் மலைக்கோட்டை, ஸ்ரீரங்கம், முக்கொம்பு, சிங்காரத்தோப்பு, சின்னகடை வீதி, பெரியகடை வீதி, கல்லணைனு திருச்சில ஒரு இடம் பாக்கி விடாம சுத்தி, லவ்வோ லவ்வுனு லவ்வினாங்க. இப்போ சென்னைல ஆளுக்கொரு சாஃப்ட்வேர் கம்பெனியில வேல பாக்குறாங்க. ரெண்டு பேர் வீட்டுலயும் மேட்டர் தெரிஞ்சு, அப்டி இப்டினு சம்மதமும் வாங்கிட்டாங்க. சரி போதும். கொசுவர்த்தி சுருள கீழ வெச்சிடுங்க. இப்ப நிகழ்காலத்துக்கு வருவோம்.

        எங்க விட்டோம். ஆங்! சண்ட சண்ட. ரகு என்ன பண்ணிக்கிட்டு இருக்கிறாப்புல? அட, வதனா நம்பர டயல் பண்ணிகிட்டிருக்காறு. மறுபுறம் ஃபுல்லாக ரிங்போய் லைன் கட்டாகப் போகிற சமயத்தில்,  "ஹலோ!"  " செல்லம், சாரிடா. நீ அனுப்பின மெஸேஜ் இப்ப தான் வந்துது. ஐ ஆம் டெரிப்ளி சாரி மா!"  5 வினாடிகளுக்கு பின் "ம்ம்ம்" என்று    மட்டும் ஒரு பதில்.  "ஏய், அதான் சாரி சொல்றேன்ல. இன்னும் என்ன கோவம்?"  " ஆளப் பாரு! உன் சாரிய உன் ஜோபுக்குள்ள போட்டு நீயே வெச்சுக்கோ. மெசேஜ் இப்ப தான் வந்துதுனா அதுக்கு நான் என்ன பண்ணுவேன்? அந்த கத்து கத்திட்டு இப்ப சாரியாம்."  " வதனா! பாத்தியா. என்ன தப்பா நெனச்சுட்ட. நான் சாரி கேட்டதோட நிறுத்தல. மெஸேஜ லேட்டா டெலிவர் பண்ணி நம்ம ரெண்டு பேருக்கும் சண்ட மூட்டி விட்ட அந்த ஏர்டெல்காரன சட்டைய புடிச்சுக் கேட்டேன். அவன் உன் சிம் பி.எஸ்.என்.எல் லா, அதனால அவன போய் கேக்க சொல்லிட்டான். உங்க அப்பா அங்க தானே வேல பாக்குறாரு. சரி நம்ம போய் ப்ரச்சன பண்ணி மாமனார் வேல பாக்குற ஆஃபீஸ்க்கு கெட்ட பேரு வந்துடக்கூடாதேங்கிற நல்லெண்ணத்துல தான் அந்த மேட்டர அப்டியே விட்டுட்டேன்.  இதைக் கேட்டவுடன் குபுக்கென வதனா சிரிக்க, "அப்பாடா!  சிரிச்சுட்டா! அப்ப திருச்சி ப்ளான் கன்ஃப்ர்ம்ட்."  என்று கொக்கியைப் போட்டான்.

        சட்டென சிரிப்பை நிறுத்திய வதனா, " ஏய்! இது என்ன புதுசா நூல் விட்ற? என்னப் புதுக் கத இது?" எனக் கேட்டாள். "அட, மறந்துட்டியா? நம்ம க்ளாஸ் ரம்யா கல்யாணம் இருக்குல்ல வர்ற 21‍‍‍‍‍ ந் தேதி திருச்சில? அதுக்கு போறதுக்கு தான்." என ரகு கேஷுவலாக சொல்ல,  " நான் தான் அன்னிக்கு என்னோட கஸின் ஆர்த்தி கல்யாணம் இருக்கு, என்னால வர முடியாதுன்னு சொல்லிகிட்டிருந்தேன்ல ரம்யா கிட்ட. நீயும் பக்கத்துல நின்னு கேட்டுட்டு தானே இருந்த? அப்புறம் என்ன இப்போ?" என்றாள்.  உடனே கொஞ்சம் கெஞ்சும் தோணியில், " அது இல்லடா. 4 நாள் ஆகும் போய்ட்டு வர. 4 நாளும் உன்ன பாக்காம இருக்கணுமே" என்று சின்ன பிட் ஒன்றை முயற்சிக்க, வதனா அதை கரெக்ட்டாக கேட்ச் செய்து,  " ஐயோ, பாவம் புள்ள! இந்த பிட்டு போடுற வேலயெல்லாம் இங்க நடக்காது. ஒழுங்கா கெளம்பி போய்ட்டு வா. 4 நாள் நானாவது நிம்மதியா இருக்கேன்." எனக் கௌன்ட்டர் அட்டாக் கொடுத்தாள். இதற்கு மேல் வேலைக்கு ஆகாது, இப்போது தான் நடந்த சண்டைக்கே சமாதானம் ஆகியிருக்கிறாள் என முடிவு செய்து, இன்று தோசைக்கு தொட்டுக் கொண்ட சட்ணியில் உப்பு கொஞ்சம் தூக்கல், ஓட்டு போட்டதுக்கு விரல்ல வெச்ச மழி அழிஞ்சிடுச்சு என நாட்டுக்கு தேவையான அனைத்து நல்ல காரியங்களையும் 1 மணி நேரம் பேசி விட்டு கைபேசியை கீழே வைத்தார்கள்.

        மார்ச் 19, 2007. மதியம் 3 மணி. எக்மோர் ரயில் நிலையம். பல்லவனில் ரகு கிளம்ப, வழியனுப்ப வந்திருந்தாள் வதனா. மிஸ் யூ படலங்களெல்லாம் முடிந்து, ரயில் புறப்பட்டவுடன் அவன் முகம் தெரியும் வரை கையசைத்துக் கொண்டே நின்று விட்டு திரும்பி நடக்கத் தொடங்கினாள் வதனா.

தொடரும்......

Tuesday, October 13, 2009

மாலை வேளையில் ஒரு காதல் கதை


அவன் என்னை முதன்முதலாய் விட்டுப் பிரிந்த தினம். இன்னும் என் மனக் கண்ணின் முன்னால். முதலில் தொட்டுக் கொடுத்தும் விட்டுப் பிடித்தும் துவங்கிய எங்களது உறவு, எப்பொழுது இரத்தமும் சதையுமாக மாறியது என்று என்னைக் கேட்டால், மன்னிக்கவும். எனக்குத் தெரியாது. 'பொண்ணுங்க இல்லனு சொன்னா இருக்குன்னு அர்த்தம்; இருக்குன்னு சொன்னாலும் இருக்குன்னு தான் அர்த்தம் என்று சொல்லிக் கொண்டு திரியும் இருபத்தொன்றாம் நூற்றாண்டு Aristotleகளே! சத்தியமா எனக்கு நியாபகம் இல்லப்பா!!

நான் கல்லூரியில் போய்ச் சேர்ந்து ஒரு வாரம் ஆகியிருந்தது. முதல் Practical session. கல்லூரிக் கட்டிடத்திற்கு பின்புறம் தன்னந்தனியாய் Asbestos கூரையோடு நின்ற ஒரு 10 தொடர் அறைகளைத் தான் laboratories என்று காட்டினார்கள். எங்களுடையது Pharmaceutical lab- ஆய் இருந்ததாலோ என்னவோ அந்த lab- இற்கு பின்புறம் கொஞ்சம் அதிகமாகவே செடிகொடிகள் மண்டி போயி கிடந்தன. Ointment, Tablet, Syrup என்று ஏதாவது தயாரிக்கச் சொல்வார்கள் என ஆர்வமாய்ப் போயி நின்றால், lab utensils clean செய்ய sodium lauryl sulphate வைத்து cleaning solution தயாரிக்கச் சொன்னார்கள். சரி, First session-இல் தான் இது. போகப் போக ointment எல்லாம் prepare செய்வோம் என்று நாங்களும் நம்பி களத்தில் இறங்கினோம். [4 வருடமும் cleaning solution -ஏ தான் prepare செய்து கொண்டிருந்தோம் என்பது கிளைக் கதை]

Production துவங்கிற்று. தண்ணீர் குழாய் lab-இற்கு பின்புறம் இருந்தபடியால் நானும் எனது batch mate -ம்ம் Conical flask-ஐ எடுத்துக் கொண்டு பின்புறம் சென்றோம். அவள் குழாயைத் திறந்து தண்ணீர் பிடிப்பதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த அந்த வினாடி! எனக்குள் ஏதோ சுருக்கென்ற ஒரு உணர்வு தாக்க சடாலென பின்னால் திரும்பினேன். அங்கே! அவன்! அவன் தானா அது? ஆம்! அவனே தான். அவன் என் கல்லூரியில்? அதுவும் என் lab- இற்கு பின்புறம். இங்கே எப்படி? என் வீட்டின் அருகாமையில் தான் இதுவரை அவனைப் பார்த்திருக்கிறேன். ஒருவேளை எனக்காக, என் மீது உள்ள அன்பிற்காகத் தான் அவனும் இந்தக் கல்லூரியில் வந்து சேர்ந்து இருக்கிறானோ எனப் பலவாறான எண்ணங்கள் என்னுள்ளே. பின்னர் எங்கள் சந்திப்பு அடிக்கடி நிகழ்வதாயிற்று. இரத்தமும் சதையுமான உறவு என்று சொன்னேனே! அது இந்த 4 வருட காலத்தில் உருவானதாயி இருக்கலாம். (Aristotle களே கவனிக்க: 'இருக்கலாம்' 'May be ' Clause)

4 வருட course- ம்ம் முடிந்தது. ஒரு பன்னாட்டுக் கம்பெனியில் வேலை கிடைத்து , training-இல் இரவும் பகலுமாய் கண் விழித்து படித்து , exams-ஐ clear செய்து,posting கிடைத்து, அப்படி இப்படி என்று ஆயிற்று ஒன்றரை வருடம் Hyderabad வந்து. இந்த காலகட்டத்தில் அவனது நினைப்பும் கூட ஏனோ வரவில்லை எனக்கு. திடீரென நேற்றிரவு. இரவு 'போஜனம் ஆயிந்தி அக்கா' என்று attendance எல்லாம் போட்டு விட்டு, IPL க்காக TV முன்னால் ஆர்வமுடன் அமர்ந்த சிறிது நேரத்தில் மழை வந்து match-ஐ ரத்து செய்ய, மழையை கருவிக் கொண்டே படுக்கையில் விழுந்து நித்திராதேவியை நான் அனைத்துக் கொண்டிருந்த அந்த வினாடி. 6 வருடங்களுக்கு முன்னால் lab-இற்கு பின்புறம் எனக்கு தோன்றிய அதே சுருக்கென்ற உணர்வு. ஆம்! அவனே தான்!! கொசு அவனது பெயர்!!!

பி.கு: எழுத்துப் பிழைகளை மன்னித்தருள்க! blogspot -இல் இருந்து பெற முடிந்த உதவி இவ்வளவே! நல்ல tamil translator site ஏதாவது இருந்தால் அதை comment - இ உதவுக! :)